அறந்தாங்கி அருகே தேர் கட்டும்போது விபத்து: ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தேர் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.
அறந்தாங்கி அருகே தேர் கட்டும்போது விபத்து: ஒருவர் பலி
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தேர் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மேலும், 5 பேருக்கு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவுக்காக தேர் கட்டும் பணி திங்கள்கிழமை பகலில் நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத விதமாக தேர் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அறந்தாங்கி அருகே தேர் கட்டும்போது விபத்து: ஒருவர் பலி
'62 பேரின் ஆன்மாக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை சும்மா விடாது'

இந்த விபத்தில் கீழே நின்றிருந்த ராமசாமிபுரத்தைச் சேர்ந்த எஸ். மகாலிங்கம் (70) என்பவர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஆனால் மகாலிங்கம் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பலியானார். மற்ற 5 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com