
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 61-லிருந்து 63-ஆக உயர்ந்துள்ளது
கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட 225 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் இன்று(ஜூன் 26) வரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 பேர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 5 பேர், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 பேர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 63 பேர் உயிரிழந்தாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 74 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 88 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.