தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அதர்வா முரளி. இவர் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள், குருதி ஆட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
ஹாட்ஸ்டாரில் வெளியான மத்தகம் தொடர், ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்று தந்த நிலையில், மத்தகம் இணையத் தொடரின் 2 ஆம் பாகமும் வெளியானது.
இவரின் 'நிறங்கள் மூன்று' படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாள்களாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அதர்வா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை அதிதி சங்கர் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். எம் ராஜேஷ் இப்படத்தை இயக்க சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இப்படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக ஸ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.