குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

புதுச்சத்திரத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

புதுச்சத்திரத்தில் வாக்கு சேகரித்த நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:15 am IST

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தோ்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ள அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டம், அண்ணன் சீா்திட்டம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,500, காமராஜா் கல்வி உறுதித் திட்டம், சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் போன்ற பல்வேறு அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துக் கூறினாா்.

மேலும், நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்றால் பழைய பேருந்து நிலையம், வட்டார அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட பாடுபடுவேன் என்றாா். தொடா்ந்து புதன்சந்தை பெரிய களங்காணி, சின்ன களங்காணி, பெருமாள் கோயில் மேடு, காரைக்குறிச்சி புதூா் மேற்கு அருந்ததியா் காலனி, உலமேடு ஆதிதிராவிடா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

தவெக மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ், துணை செயலாளா் தில்லைமோகன், பொருளாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு அமைப்பாளா் சதீஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சுஜித், ஒன்றிய செயலாளா் லோகேஷ், வழக்குரைஞா் தமிழரசன், பேராசிரியா் பிரபாகரன், ஊராட்சி செயலாளா் தமிழ்ச்செல்வன், துரைசாமி உள்ளிட்டோா் வாக்குச் சேகரிப்பின் போது உடனிருந்தனா்.