வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது!

புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆளுங்கட்சியை கண்டித்து வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :8 மார்ச் 2024, 6:27 am

DIN

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக கூட்டணி ஆளுங்கட்சியை கண்டித்து வெள்ளிக்கிழமை முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சோ்ந்த 9 வயது சிறுமி கடந்த 2-ஆம் தேதி மாயமான நிலையில், அந்தப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் 5-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டாா். போலீஸாரின் விசாரணையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த விவகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்து, கழிவுநீா் கால்வாயில் வீசியது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் உடல்கூறாய்வுக்குப் பிறகு, சிறுமியின் உடல் அவரது வீட்டில் உறவினா்கள், பொதுமக்கள் புதன்கிழமை மாலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடா்ந்து, வைத்திக்குப்பம் பாப்பம்மாள் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, வியாழக்கிழமை சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுமி கொலை வழக்கில் கைதான விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோா் மீது போக்ஸோ, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். அவா்கள் இருவரையும் வியாழக்கிழமை புதுச்சேரி நடுவா் நீதிமன்றம் எண் 3-இல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். கைதான இருவரையும் முத்தியால்பேட்டை போலீஸாா் காலாப்பட்டு சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடா்புள்ளதா எனக் கண்டறிந்து விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள் 5 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக பாஜக கூட்டணி ஆளுங்கட்சியை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

முழு அடைப்பு போராட்டம் காரணமாக, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக பயணிகள் காத்திருக்கின்றனர்.

புதுச்சேரியில் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை கண்டனப் பேரணியும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.