சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை: தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

News image
உயா்நீதிமன்றம்
Updated On :12 மார்ச் 2026, 12:12 am

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன், தனது இருசக்கர வாகனத்தில் 16 மற்றும் 14 வயது சிறுமிகளை சொந்த ஊருக்கு அழைத்து சென்றாா். மதுராந்தகம் செல்லும் வழியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் விபத்தை ஏற்படுத்தி, 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா். சிறுமியை மீட்ட அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்தநிலையில், சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை ஆஜரான வழக்குரைஞா் சூரியபிரகாசம், தமிழகத்தில் அண்மைக் காலமாக சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மதுராந்தகத்தில் சிறுமிக்கு நேரிட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தாா். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் இதுகுறித்து விசாரிக்கப்படும் என தெரிவித்தனா்.