தள்ளுபடி விலையில் ஆவின் நெய் விற்பனை!

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஆவின் நெய்யினை மார்ச் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தள்ளுபடி விலையில் ஆவின் நெய் விற்பனை!

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஆவின் நெய்யினை மார்ச் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருள்களான நெய், வெண்ணெய், தயிர் மற்றும் பனீர் வகைகளை 10,000-க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் மக்களுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

ஆவின் நிறுவனம் காலத்திற்கேற்ப மற்றும் மக்களின் விருப்பத்தை அறிந்து பால் உபபொருள்களில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. மேலும் மக்களின் தேவையை அறிந்து புதுவகையான பால் உபபொருள்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது.

தள்ளுபடி விலையில் ஆவின் நெய் விற்பனை!
4000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இந்தநிலையில், மக்களுக்கு அன்றாடம் தேவைப்படுகின்ற மற்றும் மக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யினை கடந்த மூன்று மாதங்களாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தள்ளுபடியானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்த தள்ளுபடியினை மார்ச் இறுதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்கள் ஆவின் நெய்யினை தள்ளுபடி விலையில் 31.3.2024 வரை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம்.

மேலும் மக்கள் பயன்பெறும் வகையில் ஆவின் பனீர் கடந்த மூன்று மாதங்களாக சலுகை விலையில் 200 கிராம் பனீர் ரூ. 120 லிருந்து ரூ. 10

குறைத்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்ததள்ளுபடியினை தொடர்ந்து நீட்டிக்க ஆவின் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com