திருவள்ளுர்: திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கியின் மேற்கூரை வியாழக்கிழமை காலை இடிந்து விழுந்ததில் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறையினர் முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.