இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுபன்சிரியில் புதன்கிழமை காலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை காலை சுமார் 4:55 மணியளவில் சுபன்சிரியில் பூமிக்கு அடியில் 10
கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.