அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுபன்சிரியில் புதன்கிழமை காலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுபன்சிரியில் புதன்கிழமை காலை 4:55 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை காலை சுமார் 4:55 மணியளவில் சுபன்சிரியில் பூமிக்கு அடியில் 10

கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com