புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: மருந்து விற்பனை பிரதிநிதி பலி!

பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி பலியானார்.

News image
Updated On :24 மே 2024, 12:18 pm

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் வெள்ளிக்கிழமை மதியம் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மருந்து விற்பனை பிரதிநிதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். மருந்து விற்பனை பிரதிநிதியான இவர், மருந்து விற்பனை தொடர்பாக மருத்துவரை சந்திப்பதற்காக ஜெயராஜ் சாலையில் வெள்ளிக்கிழமை மதியம் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

ஆனந்த்.

ஆனந்த்.

அப்போது மதுரையில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில் நிலைத்திடுமாறி கீழே விழுந்த ஆனந்தின் உடல் மீது பேருந்தின் பின்பக்கச் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திய பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்த் சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.