திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது.
சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சில நாள்களுக்கு முன்பு, இப்பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35-க்கும் , மேற்பட்ட மாணவர்கள் மயங்கிய விழுந்த நிலையில், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.
இதையும் படிக்க: சென்னை அருகே சாலை விபத்து: இரண்டு பெண் காவலர்கள் பலி
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பத்து நாள்களுக்கு இந்த தனியார் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், தனியார் பள்ளி இன்று(நவ. 4) மறுபடியும் திறக்கப்பட்டது.
காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளியை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!

சென்னை துறைமுக ரசாயன கசிவு விவகாரம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவு

குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் அரசின் நலத்திட்டங்கள் கிடையாது: கிராம ஊராட்சிகள் அதிரடி







