3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

வாயு கசிவு: திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்!

திருவொற்றியூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவு தொடர்பாக...

News image
Updated On :4 நவம்பர் 2024, 1:57 pm IST

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டதால், தற்காலிகமாக பள்ளி மூடப்பட்டது.

சென்னை திருவொற்றியூர் கிராமத்து தெருவில் தனியார் பள்ளியொன்று இயங்கி வருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

சில நாள்களுக்கு முன்பு, இப்பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 35-க்கும் , மேற்பட்ட மாணவர்கள் மயங்கிய விழுந்த நிலையில், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பத்து நாள்களுக்கு இந்த தனியார் பள்ளியை மூட உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், தனியார் பள்ளி இன்று(நவ. 4) மறுபடியும் திறக்கப்பட்டது.

காலை வழக்கம்போல் பள்ளி செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் 2 மாணவிகள் மயங்கி விழுந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளியை தற்காலிகமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.