
டெல்லி கணேஷ் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,
''புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் மறைவு வருத்தமளிக்கிறது. அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசிர்வதிக்கப்பட்டவர் டெல்லி கணேஷ். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர் கொண்டுவந்த நடிப்பின் ஆழம் மற்றும் தலைமுறைகளைக் கடந்து பார்வையாளர்களைக் கவரும் திறமையாலும் டெல்லி கணேஷ் நினைவுகூரப்படுவார். நாடகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். டெல்லி கணேஷை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்'' எனப் பதிவிட்டுள்ளார்.
Deeply saddened by the passing of the illustrious film personality, Thiru Delhi Ganesh Ji. He was blessed with impeccable acting skills. He will be fondly remembered for the depth he brought to each role and for his ability to connect with viewers across generations. He was alsoâ¦
— Narendra Modi (@narendramodi) November 10, 2024
பிரபலங்கள் இரங்கல்
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று (நவ. 10) காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.
டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு திரைத் துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் பிறந்த டெல்லி கணேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்தவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






