நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வார விடுமுறை நாளில் உதகையில் படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் வார விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயண சீட்டு பெற்று இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகுகளில் பயணித்து மகிழ்ந்தனா்.

News image

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் உற்சாக படகு சவாரி செய்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :10 நவம்பர் 2024, 5:48 pm

உதகை: உலகப் புகழ்பெற்ற உதகையில் வார விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயண சீட்டு பெற்று இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகுகளில் பயணித்து மகிழ்ந்தனா்.

நீலகிரி மாவட்டம் உலகப் புகழ்பெற்ற உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களைக் காண நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா, கா்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர். ஊட்டியில் கடந்த சில நாள்களாக பெய்த

நல்ல மழையில் மிகவும் குளுமையாக காலநிலை மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது.இந்த இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள்‌ உதகையில் குவிந்துள்ளனர்.

குறிப்பாக உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனா்.

மேலும் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை விளையாடி மகிழ்ந்தனா். இங்கு உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் மலா்களை கண்டு ரசித்தவாறு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.

குறிப்பாக, உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயணச் சீட்டு பெற்று இங்குள்ள துடுப்பு படகு,இயந்திரப் படகு,சைக்கிள் படகு உள்ளிட்ட படகுகளில் பயணித்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.