மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சாக்கு மூட்டையில் தலித் பெண்ணின் உடல்: பாஜகவுக்கு ஆதரவளித்ததால் கொலையா?

கொலை சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு.

News image

கோப்புப்படம்

Updated On :20 நவம்பர் 2024, 11:44 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் கர்ஹல் தொகுதியில் 23 வயது பிற்படுத்தப்பட்ட பெண்ணின் சடலம், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கர்ஹல் தொகுதியில் இன்று(நவ. 20) இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது என்று சமாஜவாதி கட்சி நிர்வாகி ஒருவர் அழுத்தம் கொடுத்தத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இறந்த பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரசாந்த் யாதவ் மற்றும் மோகன் கத்தேரியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணை கொலை செய்ததாக இறந்த பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியதாக மெயின்புரி மாவட்ட காவல் துறை அதிகாரி வினோத் குமார் தெரிவித்தார்.

பெண்ணின் தந்தை கூறுகையில், “மூன்று நாள்களுக்கு முன்பு பிரசாந்த் யாதவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்று என் மகளை கேட்டார். என் மகள் தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கவுள்ளதாகவும், ஏனென்றால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் எங்களுக்கு வீடு கிடைத்துள்ளதாகவும் என் மகள் கூறினார்.

ஆனால் அவர்கள், சமாஜவாதி கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்து என் மகளை மிரட்டினார்கள்.” என்று தெரிவித்தார்.

தலித் பெண் இறப்பு தொடர்பாக பாஜக, சமாஜவாதி கட்சியை கடுமையாக சாடியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.