தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

3 மணி நேரத்தில் 362 மி.மீ... ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை!

தங்கச்சிமடத்தில் 322 மி.மீ. மழைப்பொழிவு.

Rain

மழை (கோப்புப்படம்)

Published On :

ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் வரலாறு காணாத வகையில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளங்களில் மழை தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பெய்த மழை தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:

ராமேஸ்வரத்தில் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் அதிகப்படியாக 411 மி.மீ மழை பெய்துள்ளது. தங்கச்சிமடத்தில் 322 மி.மீ. மழைப்பொழிந்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது. 3 மணி நேரத்தில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 190 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.