மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

3 மணி நேரத்தில் 362 மி.மீ... ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத மழை!

தங்கச்சிமடத்தில் 322 மி.மீ. மழைப்பொழிவு.

News image
மழை (கோப்புப்படம்)
Updated On :20 நவம்பர் 2024, 2:22 pm

DIN

ராமேஸ்வரத்தில் 3 மணி நேரத்தில் வரலாறு காணாத வகையில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளங்களில் மழை தொடர்பான தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் பெய்த மழை தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது:

ராமேஸ்வரத்தில் மாலை 4 மணி வரை 10 மணி நேரத்தில் அதிகப்படியாக 411 மி.மீ மழை பெய்துள்ளது. தங்கச்சிமடத்தில் 322 மி.மீ. மழைப்பொழிந்துள்ளது. ராமேஸ்வரம் பகுதியில் வரலாறு காணாத வகையில் மழை பெய்துள்ளது. 3 மணி நேரத்தில் 362 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 190 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.