ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம்: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து...
அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்
Updated on
1 min read

ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம் என்று உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தேர்தலை ஊழலுக்கு இணையாக ஆக்கியவர்களின் தந்திரங்களை புகைப்படங்களாக எடுத்து, உலகிற்கு காட்டும் நேரம் வந்துவிட்டது. உண்மையான போராட்டம் தொடங்கிவிட்டது. ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 7 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. சமாஜவாதி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் - சமாஜவாதி கூட்டணி அமைந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com