வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம்: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து...

News image
அகிலேஷ் யாதவ்
Updated On :23 நவம்பர் 2024, 11:19 am

DIN

ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம் என்று உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தேர்தலை ஊழலுக்கு இணையாக ஆக்கியவர்களின் தந்திரங்களை புகைப்படங்களாக எடுத்து, உலகிற்கு காட்டும் நேரம் வந்துவிட்டது. உண்மையான போராட்டம் தொடங்கிவிட்டது. ஒன்றிணைந்தால் நாம் வெற்றி பெறலாம்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 7 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் நிலையில் உள்ளது. சமாஜவாதி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் - சமாஜவாதி கூட்டணி அமைந்தால் பாஜகவை வீழ்த்தலாம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.