விஜய்க்கு அரசியல் கை கொடுக்கும்: ஆனந்த் ராஜ் பேட்டி
நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என தஞ்சையில் நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.


நடிகர் விஜய் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என தஞ்சையில் நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் திரைப்பட நடிகர் ஆனந்தராஜ் வெள்ளிக்கிழமை குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டினர் தமிழ்நாட்டிற்கு வந்து தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்க்க ஆசைப்படுவார்கள். இது கட்டட கலையுடன் கூடிய சிறப்பு வாய்ந்த ஆலயம். சினிமா தற்போது நன்றாக உள்ளது. அதனால்தான் அரசியலில் இல்லாமல் அதை பார்த்து வருகிறேன் என்றும் சீமானை நடிகராக தான் தெரியும், அரசியல்வாதியாக மாறி இருக்கிறார். தற்போது திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவருடன் சில விஷயங்களை நேரில் பேசி பின்னர் தெரிவிக்கிறேன் என்றார்.
மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்துகள். அவர் நடிக்க வந்ததிலிருந்து வெற்றி தான், நிச்சயமாக அரசியல் அவருக்கு கை கொடுக்கும் என்று நம்புவதாகவும், தஞ்சை பெரிய கோவிலை பார்ப்பதற்கு தமிழ்காரர்களை விட வட இந்தியர்கள், அயல் நாட்டினர் அதிகயளவில் வருகின்றனர்.இது மிகப்பெரிய பெருமை என்றும் இளைஞர்கள் கட்டுப்பாட்டுடன் உடலை வைத்துக் கொள்ள வேண்டும், தீய பழக்கங்கள் இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சி என்று ஆனந்த் ராஜ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...