புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு!

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் ரயில் சேவை பாதிப்பு.
Train
மின்சார ரயில் (கோப்புப்படம்)Din
Published on
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையேயான மின்சார ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீஞ்சூர் ரயில் அருகே சரக்கு ரயிலின் 2 பெட்டிகளுக்கு இடையே இணைப்பு கொக்கி உடைந்து சேதமடைந்ததால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைக்கும் பணியில் ரயில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், ரயில்கள் புறப்பாடு தாமதமாகியுள்ளது. ரயில்கள் ஆங்காங்கே நின்று செல்கின்றன.

15 மாதங்களுக்குப் பின் சுறுசுறுப்பான செந்தில் பாலாஜியின் இன்ஸ்டா கணக்கு!

சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள பிரச்னைக் காரணமாக கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் மற்றும் சூளூர்பேட்டை - சென்னை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக். 2) புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com