ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

நிறைவடையும் பிரபலத் தொடர்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இறுதிக்கட்டத்தை நோக்கி இந்து செளத்ரி மீனா தொடர்.

மீனா தொடர்.

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனா தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.

மீனா தொடரில் இந்து செளத்ரி பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஆனந்த ராகம் தொடரில் நடித்தவர். மேலும், இத்தொடரில் ஜெய் ஸ்ரீனிவாச குமார், அபிஷேக் சங்கர், விக்னேஷ், சோனியா போஸ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

பிரிந்துபோன இரு குடும்பங்களை இணைப்பதற்காக மீனா மேற்கொள்ளும் முயற்சிகளே இத்தொடரின் மையக்கருவாக உள்ளது. இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை முற்பகல் 11 மணி ஒளிபரப்பாகி வருகிறது.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி முதல் மீனா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தொடர் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே நிறைவடையவுள்ளது, இந்த தொடர் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அண்மையில், இத்தொடரின் இறுதிக்கட்டக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா, மலர், சுந்தரி உள்ளிட்ட தொடர்கள் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், மீனா தொடரும் நிறைவடையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.