கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

மே.இ.தீவுகளை வீழ்த்தி தெ.ஆ. அசத்தல் வெற்றி!

மே.இ.தீவுகளை வீழ்த்தி தெ.ஆ. அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 7:09 pm IST

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

மகளிருக்கான 9-வது உலகக்கோப்பை போட்டிகள் ஐக்கிய அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் துபை ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற அக்டோபர் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இன்று(அக்.4) துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் லாரா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி, களமிறங்கிய மேற்கிந்திய அணிகள் தரப்பில் யாரும் சரியாக சோபிக்கவில்லை. அதிகபட்சமாக டெய்லர் 44 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கேப்டன் மேத்யூஸ் 10, டோட்டின் 13, விக்கெட் கீப்பர் காம்பெல்லே 17 ரன்கள் அடித்தனர். தென்னாப்பிரிக்கத் தரப்பில் ம்லாபா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

அடுத்து 20 ஓவர்களில் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் விக்கெட்டை இழக்காமல் அரைசதமடித்து தங்கள் அணியை வெற்றி பெறவைத்தனர்.

கேப்டன் லாரா 59 ரன்களும், பிரிட்ஸ் 57 ரன்களும் எடுத்தனர். 17.5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.