மழை களத்தில் மக்களுக்கு பணியாற்ற அதிமுக சார்பில் தனி குழு: இபிஎஸ் அறிவிப்பு
சென்னை மழை களத்தில் மக்களுக்கான மழை நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் தனி விரைவு நிவாரண குழு அமைத்து எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


சென்னை: சென்னை மழை களத்தில் மக்களுக்கான மழை நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் தனி விரைவு நிவாரண குழு அமைத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம்.
இதையும் படிக்க | சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!
எனவே தான், அதிமுக சார்பில் உதவ ஐடி விங் சார்பில் தனி விரைவு நிவாரண குழு(Rapid Reponse Team) அமைத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்றது.
தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, மீண்டும் ஐடி விங் சார்பில் தனி விரைவு நிவாரண குழு(Rapid Response Team) அமைக்கப்பட்டுள்ளது.
சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த செயலற்ற திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அதிமுக உழைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...