புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

News image
விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வந்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Updated On :18 அக்டோபர் 2024, 7:12 am

DIN

விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது கஞ்சனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இதையடுத்து வழக்கு விசாரனையை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.