விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.


விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் போது கஞ்சனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதையும் படிக்க | சட்டத்தின் ஆட்சி அவா்களுக்கில்லை!
இந்த வழக்கு மீதான விசாரணை விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து வழக்கு விசாரனையை நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி சத்யநாராயணன் உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...