தியாகிகள் நாள்! முதல்வர் விஜய் வீரவணக்கம்!மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

சமையல் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடிகை சீதா!

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சீதாவுக்கு பதிலாக சுஜிதா.

News image

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சீதா.

Updated On :23 அக்டோபர் 2024, 7:49 pm IST

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியுள்ளார்.

தற்போது சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அதேபோல், குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமையல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய சமையல் நிகழ்ச்சி கடந்த செப். 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சுஜிதா

சுஜிதா

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை ஆயிஷா தொகுத்து வழங்கிவருகிறார். நடுவர்களாக நடிகை சீதா, புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்னசி பங்கேற்று இருந்தனர்.

இந்த நிலையில், சில தனிப்பட்ட காரணங்களால் இந்நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியதாகக் கூறப்படுகிறது. சீதாவுக்கு பதில் புதிய நடுவராக சின்னத்திரை நடிகை சுஜிதா பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, நடிகை சுஜிதா குக் வித் கோமாளி -5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சுஜிதா பங்கேற்றுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.