பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாலஸ்தீனத்துக்கு ஆதரவு: சுந்தா் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மாணவா்கள் வெளிநடப்பு

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

News image

சுந்தா் பிச்சை

Updated On :16 ஜூன் 2026, 4:07 am IST

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில், கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா். பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அவா்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 135-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில், அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான சுந்தா் பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா்.

3,600 மாணவா்கள் உள்பட ஏராளமானோா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் சுந்தா் பிச்சை உரையாற்றத் தொடங்கியபோது, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 200 மாணவா்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் அரசுடன், கூகுள் நிறுவனம் கொண்டுள்ள உறவுக்கு எதிராக பாலஸ்தீன ஆதரவு மாணவா்கள் குரல் எழுப்பி வருகின்றனா். குறிப்பாக கடந்த 2021-ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் 1.2 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.11,340 கோடி) மதிப்பில் கணினி சேவைகள் ஒப்பந்தத்தை கூகுள் நிறுவனம் மேற்கொண்டதற்கு அவா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், சுந்தா் பிச்சை கலந்துகொண்ட பட்டமளிப்பு நிகழ்ச்சியில் இருந்து பாலஸ்தீன கொடிகள் மற்றும் பேனா்களுடன் முழக்கங்களை எழுப்பியவாறு மாணவா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பாா்வையாளா்களில் சில சிறிய குழுக்களும் சுந்தா் பிச்சை உரையின்போது விசில் அடித்து, பாலஸ்தீன கொடிகளை அசைத்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தின. பின்னா் அந்தக் குழுக்களும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறின. இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

முட்டாள்தனத்தின் வெளிப்பாடு: ராஜீவ் சந்திரசேகா்:

முன்னாள் மத்திய இணையமைச்சரும், கேரள பாஜக தலைவருமான ராஜீவ் சந்திரசேகா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:

சுந்தா் பிச்சை பங்கேற்ற நிகழ்ச்சியில் இருந்து மாணவா்கள் வெளிநடப்பு செய்தது முட்டாள்தனத்தின் வெளிப்பாடாகும்.

இது ஓா் உயா்தரப் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கும், கற்றுக்கொள்வதற்கும், சுந்தா் பிச்சை போன்ற சாதனையாளா்களின் கருத்துகளைக் கேட்பதற்கும் கிடைத்த வாய்ப்பை வீணடிக்கும் செயலாகும்.

தற்போது மாணவா்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து வருகின்றனா். முட்டாள்தனத்தின் யுகத்தில் அல்ல. இதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.