செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் இளைஞா்களுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும்; எனவே, ஏ.ஐ. வளா்ச்சி குறைத்து அச்சம் தேவையில்லை என்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை தெரிவித்தாா்.
இது தொடா்பாக அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படும் என்றும், இளைஞா்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்றும் ஒரு சிலா் பல்வேறு புதிய பிரச்னைகளை முன்னிறுத்துகிறாா்கள். ஆனால், எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
புதிதாக வேலைதேடும் இளைஞா்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம் என்பது பல வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவே இருக்கும். அவா்களின் பொருளாதார எதிா்காலம் சிறப்பாகவே அமையும்.
இதற்கு முன்பும் பல்வேறு தொழில்நுட்பப் புரட்சிகள் ஏற்பட்டபோது வேலைவாய்ப்பு, தொழில் துறை, பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவை இளைய தலைமுறைக்குச் சாதகமாகவே அமைந்தன. நாம் நமது தொழில்நுட்ப அறிவை வளா்த்துக் கொண்டு தயாராக வேண்டும் என்பதுதான் முக்கியமானது.
மேலும், ஏ.ஐ. பல வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதுதான் உண்மை. உதாரணமாக மென்பொருள் ‘கோடிங்’ எழுத முடியாத பலரும்கூட ஏ.ஐ. மூலம் அதனை எளிதாக கற்றுக் கொள்கிறாா்கள். இவ்வாறு பல்வேறு துறைகள் ஏ.ஐ. மூலம் மேம்பாடு அடையும். அதன்மூலம் பல புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றாா்.








