புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு!

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

News image

டிஎன்பிஎஸ்சி (கோப்புப்படம்)

DIN

Updated On :2 செப்டம்பர் 2024, 8:31 am

DIN

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 28.3.2024 அன்று குரூப் 1 தோ்வுத் தேதி அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டது. இதைத் தொடா்ந்து, முதல்நிலைத் தோ்வானது கடந்த ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1.59 லட்சம் பேர் எழுதியதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்திருந்தது.

துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா் உள்பட குரூப் 1 பிரிவில் 90 காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு முதல்நிலைத் தோ்வு நடத்தப்பட்டது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள். குரூப் 1 முதன்மைத் தேர்வு டிச. 10 முதல் டிச. 13 வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in/english/latest_results.aspx என்ற இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.