இந்த உத்தரவை எதிா்த்து, மாநில லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யாததால் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இவ்வழக்கில், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுகளை ரத்து செய்ததோடு, வழக்கில் இருந்து அமைச்சா் விடுவிக்கக் கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி உத்தரவிட்டாா். மேலும், விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி, விரைந்து தீா்ப்பளிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூா் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.