மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்

நெல்லையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:29 am

நெல்லையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லையில் பல ஆண்டுகள் பெருமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாக தனியாருக்கு சொந்தமான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான சீண்டல்கள் அளித்து வருவதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த தற்காலிக ஆசிரியர் ராபர்ட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு நிரந்தர ஆசிரியரான நெல்சனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த ஆசிரியர்களிடம் துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டபோது, பாலியல் ரீதியிலான சீண்டல்கள் குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தற்போது போலீசார் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.