யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் பணியிடை நீக்கம்

நெல்லையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 8:29 am

DIN

நெல்லையில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆசிரியர்கள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லையில் பல ஆண்டுகள் பெருமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாக தனியாருக்கு சொந்தமான மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் ஏழாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் ரீதியிலான சீண்டல்கள் அளித்து வருவதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து அங்கு பணிபுரிந்து வந்த தற்காலிக ஆசிரியர் ராபர்ட் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொரு நிரந்தர ஆசிரியரான நெல்சனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த ஆசிரியர்களிடம் துறைரீதியாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டபோது, பாலியல் ரீதியிலான சீண்டல்கள் குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் தற்போது போலீசார் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.