தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நிதி வேண்டும் என்றால், புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மத்திய அமைச்சர் உங்கள் கோரிக்கைக்கு பதில் கொடுத்திருக்கிறார். அதைப்போல, மெட்ரோ ரயில் பிராஜக்ட் இரண்டிற்கு மத்திய அரசின் பங்களிப்பை இதுவரைக்கும் கொடுக்கவில்லை. நேற்று முன்தினம் கூட மத்திய நிதி அமைச்சர் நான் கடனுதவி பெற்றுக் கொடுத்தோம் என்று விளக்கியிருந்தார்கள். ஆனால், மத்திய அரசின் பங்களிப்பை கொடுக்கவில்லை. இந்த இரண்டு பெரும் நிதி தேவை என்று வலியுறுத்தி பிரதமரை நீங்கள் சந்தித்து வலியுறுத்துவீர்களா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக, உறுதியாக.. மெட்ரோ இரயில் திட்டத்திற்கும், பள்ளிக் கல்வித்துறையின் நிதிக்கு புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்வது குறித்தும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரதமர் இடத்தில் உடனடியாக நேரம் கேட்டு, நானும் அதுகுறித்து வலியுறுத்த இருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.