இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான துலிப் சமரவீராவுக்கு ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளராகப் பணியாற்ற 20 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடை
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரான துலிப் சமரவீரா நடத்தைவிதிகளை மீறி அணியில் இருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டக் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் பயிற்சியாளராகப் பணியாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
கிரிக்கெட் வீரர்
துலிப் சமரவீரா இலங்கை அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் 2008 ஆம் ஆண்டு விக்டோரியா பெண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையின் படி 52 வயதான துலிப் சமரவீரா அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் எந்த கிரிக்கெட் அமைப்பிலும் பணியாற்றக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக செயல் இயக்குநர் பேச்சு
இதுபற்றி விக்டோரியா கிரிக்கெட் அணியில் நிர்வாக செயல் இயக்குநர் நிக் கம்மின்ஸ் கூறுகையில், “பயிற்சியாளருக்கு தடை விதிக்கப்பட்டதை ஆதரிக்கிறேன். மேலும், அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கும் வாழ்த்துகள். அந்தப் பயிற்சியாளர் வலுக்கட்டாயமாக அணியில் உள்ள பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் தொடர்புடைய பெண் தைரியாமாக செயல்பட்டுள்ளார்” என்றார்.
இதுவரை இந்த வழக்கில் பதிலளிக்காத சமரவீரா கடந்தாண்டு நவம்பர் மாதம் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் இரு வாரங்களில் பதவியில் இருந்து விலகினார்.
அவர் மகளிர் பிக் பாஷ் கிரிக்கெட்டில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தீர்ப்புக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிரடி முன்னேற்றம்... டி20 தரவரிசையை அசைத்துப் பார்த்த வைபவ் சூர்யவன்ஷி!

ஆஷஸ் தொடரை இந்தியாவில் நடத்த திட்டமிடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்?

குற்றத்தை ஒப்புக்கொண்ட டேவிட் வார்னர்..! 9 மாதங்கள் சிறை?

பாலியல் சீண்டல்: பெண்கள் கிரிக்கெட் அணி பயிற்சியாளர், மேலாளருக்கு வாழ்நாள் தடை!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



