காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சென்னை கே.கே. நகரில் மழைநீா் கால்வாயில் விழுந்தவர் பலி

சென்னை கே.கே. நகரில் மழைநீா் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்த கூலித்தொழிலாளி பலியானார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2024, 3:22 pm

DIN

சென்னை: சென்னை கே.கே. நகரில் மழைநீா் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்த கூலித்தொழிலாளி பலியானார்.

சென்னை கே.கே.நகா் அம்பேத்கா் குறுக்கு தெருவில் மழைநீா் கால்வாய் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள்(பேரிகார்டு) வைக்கப்பட்டிருந்த நிலையில், மதுபோதையில் நடந்துசென்ற அதே பகுதியைச் சோ்ந்த அய்யப்பன்(35) ஞாயிற்றுக்கிழமை தடுப்புகள் மீது தடுமாறி விழுந்து, பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆா் நகா் காவல்நிலைய போலீசார், அய்யப்பன் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக கே.கே. நகா் இஎஸ்ஐ மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.