சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் காலமானார்

பாலிவுட் திரையுலக ஜாம்பவான் மனோஜ் குமார் மறைவு பற்றி...

News image

நடிகர் மனோஜ் குமார்

Updated On :4 ஏப்ரல் 2025, 9:02 am IST

மும்பை: ஹிந்தி திரையுலகின் ஜாம்பவானும் பழம்பெரும் நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான மனோஜ் குமார்(87) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார்(87) வயது முதிர்வு மற்றும் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையிலேயே காலமானார் என்பதை அவரது குடும்ப நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் உறுதிப்படுத்தினார்.

1937 ஜூலை 24 ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸில் பிறந்த மனோஜ் குமார், ஹிந்தி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். தனது வாழ்நாள் முழுவதும், தேதத்தின் பெருமை மற்றும் ஒற்றுமை உணர்வை மையமாகக் கொண்ட படங்களில் நடிப்பு மற்றும் இயக்கத்திற்காக அறியப்பட்டார்.

"ஷாஹீத்", "உப்கார்" மற்றும் "புரப் அவுர் பஸ்சிம்" போன்ற பிரபலமான தேசபக்தி படங்களில் நடித்ததற்காக 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவருக்கு, இந்திய கலைகளுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மத்திய அரசு 1992 இல் பத்மஸ்ரீ விருது, 2015 இல் இந்திய சினிமாவின் மிக உயர்ந்த அங்கீகாரமான தாதாசாகேப் பால்கே விருதையும் வழங்கி கௌரவித்தது மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஏழு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கியவர்.

அவரது மறைவு திரைப்படத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை கவலையும் ஏற்படுத்தியுள்ளது, பலர் தங்கள் அஞ்சலி, இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு குடும்ப நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.