பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவின் சரியாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் வாகனத்தின் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அம்மாகாணத்தின் நோஷ்கி பகுதியில் நேற்று (ஏப்.9) பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். சமீபத்தில், பாகிஸ்தான் படையினர் மீதான கொரில்லா பாணி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பலூச் கிளர்ச்சியாளர்கள்; பாகிஸ்தான் அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்துவதுடன் அந்நாட்டின் வளமிக்க பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சீனா - பாகிஸ்தான் திட்டங்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உத்தமபாளையத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: இருவர் பலி
ரோஹிணியில் துப்பாக்கிச் சூடு: ஹிமன்ஷு ரெளடி கும்பலின் உறுப்பினா், சிறுவன் கைது

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி

ஜொ்மனியில் இளைஞா் நலக் காப்பக்கத்தில் துப்பாக்கிச் சூடு!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



