பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவின் சரியாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் வாகனத்தின் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அம்மாகாணத்தின் நோஷ்கி பகுதியில் நேற்று (ஏப்.9) பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். சமீபத்தில், பாகிஸ்தான் படையினர் மீதான கொரில்லா பாணி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பலூச் கிளர்ச்சியாளர்கள்; பாகிஸ்தான் அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்துவதுடன் அந்நாட்டின் வளமிக்க பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சீனா - பாகிஸ்தான் திட்டங்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஸ்சிம் விஹாரில் உடற்பயிற்சிக் கூடம் வெளியே துப்பாக்கிச் சூடு: பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

தென்னாப்பிரிக்கா: குடியிருப்புப் பகுதியில் மா்ம கும்பல் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு

தெற்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: பிரின்ஸ் தியோடியா கும்பல் உறுப்பினா்கள் 3 போ் கைது
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த கோரிக்கை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



