திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

காவல் வாகனத்தின் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு! 3 காவலர்கள் பலி!

பாகிஸ்தானில் காவல் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2025, 4:26 pm IST

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் வாகனத்தின் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டாவின் சரியாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் வாகனத்தின் மீது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அம்மாகாணத்தின் நோஷ்கி பகுதியில் நேற்று (ஏப்.9) பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். சமீபத்தில், பாகிஸ்தான் படையினர் மீதான கொரில்லா பாணி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில், பலூச் கிளர்ச்சியாளர்கள்; பாகிஸ்தான் அதிகாரிகளின் மீது தாக்குதல் நடத்துவதுடன் அந்நாட்டின் வளமிக்க பலூசிஸ்தான் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் சுமார் 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சீனா - பாகிஸ்தான் திட்டங்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.