வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

மணிப்பூரில் அதிரடி சோதனை! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்...கிளர்ச்சியாளர் கைது!

மணிப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :10 ஏப்ரல் 2025, 11:14 am IST

மணிப்பூரின் காக்சிங் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கிளர்ச்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காக்சிங் மாவட்டத்தின் டோக்பாசிங் மொய்ரங்கோம் மலைப்பகுதியில் நேற்று (ஏப்.9) சோதனை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர் ஐ.ஈ.டி. எனும் நவீன வெடி குண்டு, கையெறி குண்டுகள், பல ரகங்களைச் சேர்ந்த ஏராளமான துப்பாக்கிகள் அதன் தோட்டக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதேபோல், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் யாரால்பாத் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தின் எதிரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாசக்கார ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்டுள்ள ஆயுதங்கள் போரோம்பாத் காவல் நிலையத்தில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அம்மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் லாம்ஸாங் சந்தையின் அருகில் தடை செய்யப்பட்ட காங்லெய்பாக் கம்யூணிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 45 வயதுடைய கிளர்ச்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்த பின்னர் கடந்த பிப்.13 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சியானது அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மணிப்பூரிலுள்ள கிளர்ச்சியாளர்கள் தாங்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடித்த பொருள்களை ஒப்படைக்க அரசு விதித்திருந்த காலக்கெடுவானது கடந்த மார்ச்.6 ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.