
தேர்வு முறைகேட்டைத் தடுத்த ஆசிரியரைத் தாக்கிய 7-ம் வகுப்பு மாணவன்!
தெலங்கானாவில் ஆசிரியரை 7-ம் வகுப்பு மாணவன் தாக்கியதைப் பற்றி...

கோப்புப் படம்
தெலங்கானாவில் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்த ஆசிரியரை 7-ம் வகுப்பு மாணவர் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
ஹைதராபாத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் கடந்த ஏப்.9 அன்று நடத்தப்பட்ட தேர்வில் 7-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பார்த்து எழுதியுள்ளார். அதனைக் கண்டுபிடித்த ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை அங்கிருந்து இடமாற்றி வேறொரு இடத்தில் அமர வைத்துள்ளார்.
இதனால், தான் அவமானமடைந்ததாகக் கருதிய அந்த மாணவன் பள்ளிக்கூடத்தின் மணியை அடிக்க பயன்படுத்தும் இரும்புக் கம்பியால் அந்த ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மாணவனின் இந்தத் தாக்குதலில் அந்த ஆசிரியருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவனின் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:உ.பி: அம்பேத்கர் சிலையை அகற்றியதால் சர்ச்சை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



