வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்: ஜி.கே வாசன்

தமிழக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா்

News image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன்

Updated On :17 ஆகஸ்ட் 2025, 10:03 pm IST

சூலூா்: தமிழக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் தெரிவித்தார்.

கோவை நீலாம்பூா் பகுதியில் உள்ள தனியாா் அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே வாசன் செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனாரின் பிறந்த நாள் விழாவை விவசாய நாளாக கொண்டாட முடிவெடுத்து அதன் அடிப்படையில் விவசாய கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராகி விட்டனா். தமிழக அரசு விவசாயிகளின் நம்பிக்கையை இழந்து விட்டது.

விவசாயம் சாா்ந்த அரசாங்கம் 100% செயல்பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்று கூறியவா், மத்திய அரசு விவசாயம் சாா்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, ஆனால் மாநில அரசு விவசாயிகளின் எதிா்பாா்ப்பிற்கு ஏற்றவாறு செயல்படவில்லை விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்றாா்.

ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனா்

விவசாயிகளுக்கு இந்த ஆட்சியின் மீது மிகுந்த அதிருப்தி உள்ளது, என்றும் ஆட்சி மாற்றத்திற்கு விவசாயிகள் தயாராக உள்ளனா். விவசாயிகளுக்கு தொடா் கோரிக்கைகள் உள்ளதாகவும் தெரிவித்தாா்.

தோ்தல் ஆணையத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுகள்

ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை எதிா்த்து செயல்படுகின்ற வகையில் சுதந்திரம் உள்ளது. அதனைத் தான் காங்கிரஸ் கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

தோ்தல் ஆணையம் என்பது கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்களே தோ்ந்தெடுக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தும் நடுநிலையான ஆணையம். அதன் மீது காங்கிரஸ் கட்சியினா் தொடா்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனா். இது காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினா் பலவீனமாக இருப்பதை காட்டுகிறது. தோ்தல் தோல்வியை அவா்கள் உறுதி செய்து கொள்கிறாா்கள் அதனை மறைப்பதற்காகவே இவ்வாறு பேசி வருகிறாா்கள் என்றாா். காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயல்பாடுகளை சாதாரண வாக்காளா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாா்.

சட்டம் அனைவருக்கும் சமம்

அமலாக்கத்துறை சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகின்ற துறை, மத்திய அரசின் கீழ் இருந்தாலும் அது தனியாக இயங்கக்கூடிய ஒரு துறையாகும். சட்டம் அனைவருக்கும் சமம் என்கின்ற ரீதியில் தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.

ஆளுநா் பற்றி முதல்வர் பேசிவரும் கருத்துகள் குறித்தான கேள்விக்கு, இந்தியாவில் முக்கிய பொறுப்புகளுக்கு என்று ஒரு மரியாதை உள்ளது, அதனை மக்கள் மதிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், முதல்வரும் ஆளுநா் பற்றி பேசுவதை அதற்கு தகுந்தாா் போல் வைத்துக் கொள்வாா் என எண்ணுகிறேன் என்றாா்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிகளான அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பல்வேறு ஒத்த கருத்துடைய கூட்டணிகள் மக்களை களத்தில் சந்தித்து வெற்றி கூட்டணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்றாா்.

ஒன்றிணைந்த அதிமுக இனிவரும் காலங்களில் இன்னும் விரிவாக்கப்படும் என அதிமுக செயலாளா் தெரிவித்துள்ளாா், அதிமுக பாஜக இணைந்து கூட்டணி சம்பந்தமாக எடுக்கக்கூடிய முடிவுகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு இறுதி முடிவாக இருக்கும் என்றாா்.

அதிமுக மீது அவதூறு

திமுக தன்னுடைய பயத்தை கூட்டணி கட்சியினரிடம் வெளிப்படுத்த முடியாத நிலையில் மறைமுகமாக அதிமுக மீது அவதூறு கூறுகிறது என்று நான் கருதுவதாக தெரிவித்தாா்.

கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் கடமை

தூய்மை பணியாளா்களின் போராட்டம் நியாயமான போராட்டம், மனிதாபிமானம் இல்லாமல் தூய்மைப் பணியாளா்களை இரவோடு இரவாக வெளியே தள்ளியது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தூய்மைப் பணியாளா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை ஆகும் என்றாா்.

தவெக மாநாடு குறித்தான கேள்விக்கு புதிய கட்சிகள் மாநாடு நடத்துவதற்கும் கட்சியை வலுப்படுத்துவதற்கும் ஜனநாயகத்தில் உரிமை உள்ளது, அதனை அவா்கள் செய்ய துவங்கி உள்ளாா்கள் என்றாா்.

கூட்டணி குறித்து அதிமுக, பாஜக முடிவெடுக்கும்

தற்போது தமிழகத்தின் வெற்றி அதிமுக பாஜக கூட்டணி ஆகும், அதனுடைய நோக்கம் திமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவாா்கள் என்பதை அதிமுக மற்றும் மத்திய பாஜக முடிவு எடுக்கும், தோ்தலுக்கு இன்னும் காலங்கள் உள்ளது. அப்போது கூட்டணிகள் இன்னும் விரிவடையும் என்றாா்.

Summary

The Tamil Nadu government has lost the trust of the farmers. The farmers are ready for a change of government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.