2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.

News image
மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவம் மீட்புக் குழுவினர்
Updated On :17 ஆகஸ்ட் 2025, 1:08 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஆக. 16 மாலை நிலவரப்படி, 13 குழந்தைகள், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மொத்தம் 307 பேர் உயிரிழந்திருப்பதாகவும, பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, ஆக. 21 வரை மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி கைபா் பக்துன்கவாவில் 327 பேர், இதில் புனோ் மாவட்டத்தில் 5,340 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் போ் உயிரிழந்துள்ளனா். 134 பேரை காணவில்லை.159 போ் படுகாயமடைந்துள்ளனா். இதையடுத்து, ஒட்டுமொத்தமாக மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக அதிகரித்துள்ளது. 3,500 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவா்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த 2,000 வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

summary

Flooding in a northwest Pakistani district has killed at least 650 people

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.