சென்னை: மணல் திருட்டுக்கு எதிராக போராடிய 22 விவசாயிகளை கைது செய்துள்ளதற்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற இடத்தை சமப்படுத்துவதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பம்பாடி ஏரியிலிருந்து சரளை மண் எடுக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி ஏரிக்கரையில் 30 அடி தாா் சாலையும் அமைக்கப்பட்டது.
இதை எதிா்த்து உழவா் உரிமை இயக்கம் சாா்பாக அருள் ஆறுமுகம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் மனு கொடுத்தும், கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து உழவா் உரிமை இயக்கத்தின் சாா்பில் கடந்த டிச.14 ஆம் தேதி விவசாயிகளை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினா் உழவா் உரிமை இயக்கத்தின் தலைவா் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா் . திமுக அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என அவா் தெரிவித்துள்ளாா் .
Summary
Seeman condemns the filing of false cases against farmers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தனியார் மருத்துவமனைகள் திறக்க தற்காலிக அனுமதி: தவெக அரசுக்கு சீமான் கண்டனம்

சீமான் - கயல்விழிக்கு பெண் குழந்தை!

தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை - சீமான்

வாக்களித்தவர்களுக்கு நன்றி; விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் : சீமான்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



