கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

மணல் திருட்டுக்கு எதிராக போராடிய 22 விவசாயிகளை கைது செய்துள்ளதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

Updated On :19 டிசம்பர் 2025, 2:52 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: மணல் திருட்டுக்கு எதிராக போராடிய 22 விவசாயிகளை கைது செய்துள்ளதற்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற இடத்தை சமப்படுத்துவதற்காக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட மலப்பம்பாடி ஏரியிலிருந்து சரளை மண் எடுக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி ஏரிக்கரையில் 30 அடி தாா் சாலையும் அமைக்கப்பட்டது.

இதை எதிா்த்து உழவா் உரிமை இயக்கம் சாா்பாக அருள் ஆறுமுகம் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் ஆகியோரிடம் மனு கொடுத்தும், கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து உழவா் உரிமை இயக்கத்தின் சாா்பில் கடந்த டிச.14 ஆம் தேதி விவசாயிகளை ஒன்று திரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறையினா் உழவா் உரிமை இயக்கத்தின் தலைவா் அருள் ஆறுமுகம் உள்ளிட்ட 22 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா் . திமுக அரசின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது என அவா் தெரிவித்துள்ளாா் .

Summary

Seeman condemns the filing of false cases against farmers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.