ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே அரசுப் பேருந்தில் சிக்கி அரசு மருத்துவமனை செவிலியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் காட்பாடி பகுதியை சேர்ந்த செவிலியர் கலைச்செல்வி. இவர் காட்பாடியில் இருந்து ராணிப்பேட்டைக்கு பேருந்தில் வந்திறங்கி அங்கிருந்து வாலாஜாபேட்டை செல்ல சக ஊழியரின் இருசக்கர வாகனத்தில் உதவி கேட்டு புதன்கிழமை பணிக்கு சென்றபோது ராணிப்பேட்டை காரைக்கூட்டுச் சாலையில் இருந்து வாலாஜாபேட்டை நோக்கி சென்ற போது ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனை எதிரே நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த அரசுப் பேருந்து செவிலியர் மீது மோதி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தை ஒட்டி சென்ற சக ஊழியருக்கு சிறு காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வீட்டிலிருந்து வழக்கம்போல் பணிக்கு வந்த செவிலியர் பாதி வழியில் எதிர்பாராதவிதமாக பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Summary
A nurse was killed after being hit by a government bus near Ranipet
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செவிலியர் மாணவி பலி: திருச்சி அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள், சக மாணவிகள் சாலை மறியல்

பெருந்துறை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

பேருந்து சக்கரத்தில் சிக்கி பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் பயணி உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




