ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கரூா் கூட்ட நெரிசல் பலி விவகாரம்: தவெக நிா்வாகிகளுக்கு சிபிஐ அழைப்பாணை!

கரூா் கூட்டல் நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடா்பான விசாரணைக்கு தில்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட காவல் துறையினருக்கு சிபிஐ அழைப்பாணை...

News image

கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கடுமையான கூட்ட நெரிசல்...

Updated On :27 டிசம்பர் 2025, 8:56 am IST

கரூா் கூட்டல் நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடா்பான விசாரணைக்கு தில்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக நிா்வாகிகள் மற்றும் கரூா் மாவட்ட காவல் துறையினர் உள்பட 8 பேருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கரூரில் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-இல் நடைபெற்ற தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து கரூரில் முகாமிட்ட சிபிஐ அதிகாரிகள், அங்கு கூட்டம் நடைபெற்ற இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் களவிசாரணை மேற்கொண்டனா். மேலும், தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த், இணை பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள், காவல் துறையினா் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினா்.

முதல்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட விசாரணைக்காக தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா்.நிா்மல் குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் மற்றும் கரூா் மாவட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்டோா் வருகிற டிச.29-ஆம் தேதி தில்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தவெக தலைவர் விஜய்க்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் தில்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The CBI has issued summons to TVk party functionaries and Karur district police officials to appear at their Delhi office for questioning in connection with the Karur stampede death case.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.