உயர்சாதித் தலைவர்கள் பழங்குடியினர் விவகாரத் துறைக்குத் தலைமை தாங்க வேண்டும், இதனால் பெரிய மாற்றத்தை காண முடியும் என கேரளத்தைச் சேர்ந்த பாஜகவின் ஒரே மக்களவை உறுப்பினரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.
கேரளம் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதியை பெற விரும்பினால், கல்வி உள்கட்டமைப்பு, சமூக நலன் போன்றவற்றில் தங்கள் மாநிலம் பின்தங்கி இருப்பதாக அறிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், கேரளத்தைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான சுரேஷ் கோபி, தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக, உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர் பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சராக வேண்டும் என்று கூறியுள்ளார்.
தில்லியின் மயூர் விஹாரில் பாஜக கேரளப் பிரிவு ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார்.
அப்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் பழங்குடியினர் விவகாரத் துறையை வழங்குமாறு கோரியதாகவும், ஆனால் அது தொடர்பான சில விதிகள் இதை அனுமதிக்காது என்று கூறியதாகவும், சிவில் விமானப் போக்குவரத்து கேட்கவில்லை என சுரேஷ் கோபி கூறினார். உயர்சாதியைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரானால், பழங்குடியினர் விவகாரத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
"பழங்குடியினர் அமைச்சர் ஒருபோதும் பழங்குடியினர் அல்லாதவராக இருக்க முடியாது என்பது நம் நாட்டின் சாபக்கேடு. ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முன்னேறிய சாதியினரின் நலனுக்காக அமைச்சராக ஆக்கப்பட வேண்டும். இந்த மாற்றம் நமது ஜனநாயக அமைப்பில் நிகழ வேண்டும்" என்று அவர் கூறினார்.
மேலும் "பழங்குடியினர் விவகாரங்களுக்கு ஒரு பிராமணர் அல்லது நாயுடு தலைமை தாங்கட்டும். பெரிய மாற்றம் இருக்கும்," என்று நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சுரேஷ் கோபி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய நலனை மையமாகக் கொண்ட முடிவுகளை எடுக்க வேண்டும்: மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

உலகத்துடன் போட்டியல்ல... இனி தலைமை! ஐஐடி இளைஞர்களைப் புகழ்ந்த பிரஹலாத் ஜோஷி!

தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதா விவகாரம்: "இண்டி' கூட்டணி தமிழக எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை

மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவிடம் 3 அம்ச கோரிக்கை மனு அளித்த சிஜேபி
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



