மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கும்பமேளா மரணங்களை பாஜக மறைத்துவிட்டது: திமுக குற்றச்சாட்டு

கூட்ட நெரிசலில் இறந்த 30 பேரும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை, அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்தது, அதனால் இறந்ததாக அந்த மாநில அதிகாரிகள்

News image

மகா கும்பமேளா.

Updated On :5 பிப்ரவரி 2025, 8:34 am

DIN

கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டியுள்ளதாக பாஜகவை திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

மௌனி அமாவாசை நாளான ஜன.29 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராட குவிந்தனர். இதன் விளைவாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30 பேர் உயிரிழந்ததாக முதல்வர் யோகி தலைமையிலான உ.பி அரசு உறுதிப்படுத்தியது.

இந்த நிலையில், கும்பமேளா கூட்ட நெரிசலில் 48 பேர் இறந்துள்ள நிலையில், மரணங்களைக் கூட மறைத்து தவறான கணக்கைக் காட்டிய உத்தரப்பிரதேச அரசை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பாதுகாக்கிறது என தமிழகத்தில் ஆளும் திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'முரசொலி' புதன்கிழமை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.

பாஜகவுக்கு உண்மையான பக்தி இருந்திருக்குமானால், அந்த நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். 'ஆனால், அது செய்யப்படவில்லை.

"கோவிலுக்கு வெளியேயும் அரசியலை மட்டுமே தங்கள் பக்தியைக் காட்டியிருக்கிறார்கள் பாஜகவும் அதனைச் சேர்ந்தவர்களும். அதனால்தான் அலட்சியமாக கும்பமேளா நடத்தி மக்களை பலி வாங்கி இருக்கிறார்கள்," என்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது, "கட்டுப்படுத்த முடியாத கூட்டம்" மற்றும் இறப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பைப் பற்றி செய்தி வெளியிடக்கூடாது என்று "செய்தி ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது" என்றும், அதன்படி, செய்தி மறைக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

"சம்பவம் நடந்து 17 மணி நேரத்திற்குப் பிறகுதான், இறப்பு எண்ணிக்கையை 30 என யோகி அரசு உறுதிப்படுத்தியது" என்றும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு "அனுமதிக்கப்படவில்லை" என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

"பாஜக செய்தால் அல்லது யோகிகள் ஆட்சி என்றால் எதுவும் கேள்வி கேட்கக் கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ் (சங்கிகள்) சட்டம்.

"உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் நாற்பத்தெட்டு பேர் இறந்துள்ள நிலையில், அந்த மரணங்களைக் கூட மறைத்து, தவறான கணக்கைக் காட்டி, மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உத்தரப்பிரதேச அரசை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது," என்று குற்றம் சாட்டியுள்ளது.

உத்தரப்பிரதேச அரசு இறந்தவர்கள் 30 பேர் என்றாலும், மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடல்களை எண்ணியதன் அடிப்படையில் 48 என்று ஆதாரங்களுடன் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகின.

ஆனால், கூட்ட நெரிசலில் இறந்த 30 பேரும் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கவில்லை, அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்தது, அதனால் இறந்ததாக அந்த மாநில அதிகாரிகள் கூறியதை மேற்கொள் காட்டிய 'முரசொலி' இந்த விபத்துகளுக்கு குழப்பம், குழப்பம் மற்றும் முறையான முன்கூட்டியே திட்டமிடுதல் இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை கும்பேளா காட்சிகள் காட்டிக் கொடுத்துவிட்டது என கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.