மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஒரேநாளில் ரூ. 237.98 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல்.

News image
கோப்புப் படம்
Updated On :11 பிப்ரவரி 2025, 7:02 am

DIN

முகூர்த்த நாளான நேற்று(பிப். 10) ஒரேநாளில் ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக பத்திரப்பதிவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஆவணங்கள் அதிகமாக பதிவு செய்யப்படுவதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் முகூர்த்த நாளன்று கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று(பிப். 10) ஒரேநாளில் பத்திரப்பதிவுத் துறை ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

2024-25 ஆம் நிதியாண்டில் டிச. 5 ஆம் தேதி அதிகபட்சமாக ரூ. 238.15 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது அதிகபட்ச தொகையாக பிப். 10 அன்று ரூ. 237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று பதிவுத் துறை கூறியுள்ளது.

தைப்பூசத்தையொட்டி இன்று(பிப். 11) அரசு விடுமுறை நாள் எனினும், நல்ல நாள் என்பதால் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்கள் இன்று செயல்பட்டு வருகின்றன.

இன்று காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு நடைபெறும் வரை அலுவலங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.