ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோப்பியன் மற்றும் ட்ரால் மாவட்டங்களில் சந்தேகப்படும்படியான 2 மர்ம பொருள்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சோப்பியன் மாவட்டத்தின் காஷ்வா சித்ராகம் மற்றும் ட்ரால் மாவட்டத்தின் பிங்லிஷ் நாக்வடி ஆகிய இரண்டு கிராமங்களில் 2 மர்ம பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அவை இரண்டும் ஐ.ஈ.டி. என்றழைக்கப்படும் நவீன வெடி குண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர், வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அதனை செயழிக்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பிப்.11 அன்று ஜம்மு மாவட்டத்தின் கட்டுப்பாட்டு கோட்டின் (எல்.ஓ.சி) அக்னூர் பகுதியில் பயங்கரவதிகள் நடத்திய ஐ.ஈ.டி நவீன வெடி குண்டு தாக்குதலில், இந்திய ராணுவ கேப்டன் ஒருவர் உள்பட 2 வீரர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நான் வேகப் பந்துவீச்சாளராக உருவாக காரணம் இவர்தான்: ஆகிப் நபி

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


