தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

கிணற்றில் மூழ்கி சிறுத்தை பலி!

ஹிமாசல பிரதேசத்தில் கிணற்றில் மூழ்கி சிறுத்தை பலியானதைப் பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :25 பிப்ரவரி 2025, 1:32 pm IST

ஹிமாசல பிரதேசத்தில் கிணற்றில் மூழ்கி பலியான நிலையில் சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹமிர்பூர் மாவட்டத்தின் பாரேரி கிராமத்தின் கிணற்றில் நேற்று (பிப்.24) இறந்த நிலையில் சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, அந்த சோதனையில் சிறுத்தை கிணற்று நீரில் மூழ்கியதினால்தான் பலியாகியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு போலீஸார் அந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக, போரஞ்ச் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி மக்கள் கூண்டமைத்து விலங்குகளை பிடிக்குமாறு வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.