சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

இஸ்ரேல் தாக்குதலில் 12 பேர் பலி... புத்தாண்டிலும் முடிவுக்கு வராத போர்!

காஸா மீது இஸ்ரேல் தாக்குதலில் 12 பேர் பலி தொடர்பாக...

News image

பாலஸ்தீனர்கள் அகதிகள் முகாம். - படம்: AP

Updated On :1 ஜனவரி 2025, 11:39 am

காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பாலஸ்தீனர்கள் பலியானதாகவும், இதில் பெண்கள், குழந்தைகள் அதிகம் எனவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். புத்தாண்டு தொடங்கியும் 15 மாதங்களாக நடைபெற்றுவரும் இந்தப்போர் முடிவுக்கு வராமல் உள்ளது.

காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வடக்கு காஸாவில் ஜபாலியா நகரில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர் தொடுத்து வருகின்றது.

மத்திய காஸாவில் கட்டப்பட்ட புரேஜ் அகதிகள் முகாமில் ஒரே இரவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண், ஒரு குழந்தை கொல்லப்பட்டதாக அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த மூன்றாவது தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று அருகிலுள்ள நாசர் மருத்துவமனை மற்றும் உடல்களைப் பெற்ற ஐரோப்பிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுக்க காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது, இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக இருந்தனர்.

பாலஸ்தீனர்கள் அகதிகள் முகாம்.

பாலஸ்தீனர்கள் அகதிகள் முகாம். - படம்: AP

காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 45,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.