குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

குஜாராத் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி..
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் இன்று காலை 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுள்ளது.

குஜராத்தின் காந்தி நகரைச் சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் கட்சு மாவட்டத்தின் பச்சாவு நகரத்திற்கு வடக்கு-வட கிழக்கிலிருந்து 23 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு இன்று (ஜன.1) காலை 10.24 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் கட்சு மாவட்டத்தில் 4 முறை 3 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் அபாயமுள்ள பகுதியான குஜராத்து மாநிலம் கடந்த 200 ஆண்டுகளில் 9 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com