சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஒருவர் கைது!

மத்தியப் பிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதைப் பற்றி...

child abuse

கோப்புப் படம். - ENS

Published On :

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் பழங்குடியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சியோனி மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 6 வயது பழங்குடியின சிறுமி இன்று (ஜன.3) காலை முதல் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர் அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகித்து அந்த சிறுமியின் உறவினர்கள் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் நயாப்புரா கிராமத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள ஒரு கால்வாயில் அந்த சிறுமியின் சடலம் கிடப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அங்குள்ள பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்த கர்டா மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் துருவே என்பவரை கைது செய்தனர்.

பின்னர், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சிறுமியை கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை அறிந்த கிராம மக்கள் சிறுமியின் உடலை சாலையில் வைத்து குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

பின்னர், அங்கு நேரில் வந்த உள்ளூர் மாவட்ட அதிகாரி சரோஜ் சிங் பரிஹார் போராட்டத்தில் ஈடுப்பட்ட சிறுமியின் குடுத்தினரிடமும் பொதுமக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இறுதியாக உள்ளூர் காவல் துறையினர் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.