தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிற்சாலையில் வெடி விபத்து! ஒருவர் பலி!

தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானதைப் பற்றி..

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜனவரி 2025, 8:53 am

DIN

தெலங்கானா மாநிலத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் ஒருவர் பலியாகியுள்ளார்.

அம்மாநிலத்தின் யாதாத்திரி-புவனகிரி மாவட்டத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று (ஜன.4) காலை ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணிப்புரியும் தொழிலாளி ஒருவர் பலியாகினார். மேலும், மற்றொரு தொழிலாளி படுகாயமடைந்துள்ளார்.

படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவர் தற்போது நலமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அம்மாநில காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெடிக்கும் தன்மையுடைய பொருள்களை உற்பத்தி செய்யும்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் மெக்னீசியம் போன்ற தாது பொருள்கள் பயன்ப்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், வெடிக்கும் அபாயமுள்ள மெக்னீசியம் அங்கு இருப்பதினால் வெடி விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு நிர்வாகம் தரப்பில் ஏதேனும் அலட்சியப்போக்குடன் செயல்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.