பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நியாய விலைக் கடைகள் நாளை(ஜன. 10) செயல்படும்.
tn govt
தமிழக அரசு
Published on
Updated on
1 min read

பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக் கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது பற்றி உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 2,20,94,585 குடும்பஅட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி,  ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு  ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார்.

இதையும் படிக்க: நெல்லை ரூ. 4,000, மதுரை ரூ. 3,800, கோவை ரூ. 3,500: விமானத்தில் அல்ல, ஆம்னி பேருந்தில்...!

மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று (09.01.2025 வியாழன்) சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில் முதல்வர் ஸ்டாலின் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (10.01.2025 வெள்ளிக்கிழமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com